Wednesday, July 16, 2008

புரட்சிச் சுவடுகள்

பின் விளைவுகளைச்
சிந்திப்பதென்பது உயிரின்
எல்லையோடு நின்றிருந்தால்
நாங்களும்
பின்வாங்கி இருப்போம் தான்..

ஆனால் எங்களின் பயணமோ…
தலைமுறை வீதிகளில்
நிகழ்காலத்தைய பிரச்சினைகளை
விமர்சித்தபடி தொடர இருக்கிற
தத்துவப் பயணம்..

காலவெளிச் சாலையின்
கடைசீ
எல்லைவரை எங்களின்
புரட்சிச் சுவடுகள்
புதிதாய் புதிதாய்
புதிது புதிதாய்
மேலே மேலே…

—-அறிவும‌தி—-

No comments: