Monday, November 10, 2008

என்னுள் நீ!!!

மழைக்காலங்களில்
மரங்களில் ஒளிந்திருக்கும்
மழைத்துளிகளை
அம்பலப்படுத்தும்
காற்றைப்போல்
என்னுள்
ஒளிந்திருக்கும்
காதலை
அம்பலப் படித்திவிடுகிறது
என்னை கடந்துசெல்லும்
உன் சுவாசம்!!!!
*********************
உன்னை
சந்திக்கும் வரை
உன்னை யார்யென்றே
தெரியாது
உன்னை
சந்தித்த பின்பு
உன்னைத் தவிர
எனக்கு
யாரையும்
தெரியவில்லை!!!!!!
*********************
இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்
காதலாய்!!!
*********************
ஊடல் கணங்களில்
என்ன பேசுவதென்று
தெரியாமல்
வார்த்தைகள் தத்தளிக்கும் போது
சலனமே இல்லாமல்
பேசத்தொடங்கி விடுகின்றன
நம் விரல்கள்!!!
*********************
என்னை
தூங்கச் சொல்லிவிட்டு
நம் கைப்பேசி
உரையாடலை
முடித்துவைத்தாய்
உன்முத்த சத்தங்களோ
என் தூக்கத்தோடுதான்
விளையாடுவேன்
என்று
அடம் பிடிக்கிறது!!!!

1 comment:

S.Lankeswaran said...

ம் நல்ல கவிதைகள். இவையும் பிறருடையதா அல்லது சொந்த ஆக்கமா?
மற்றது ரவிகாந்தன். இந்த word verification என்பதை நீங்கி விடுங்கள் பின்னுட்டம் இடுவதற்கு அது எரிச்சலை ஏற்படுத்தும்.