Wednesday, November 5, 2008

படித்து ரசித்தவை

யாழ்...

நிலவின் ஒளியில்
தென்னம்கட்டிலின் மடியில்
யாழ் கடற்கரையில்
கொஞ்சும் தமிழ் மொழியில்

எப்போழுது
எங்கள் குழந்தைகள்
குறளை கேட்டு தூங்குமோ...

அப்பொழுது
வெடிகுண்டு சத்தமில்லா
மனிதம் வளர்ப்போம்!!!

வாழ்க்கை வட்டம்!!

வாழ்க்கை தெரிந்தது ஓர் வட்டமாய்!
அதில் சதுரங்கம் ஆட நினைத்தேன்!!
சிற்சில கருப்பு வெள்ளைச் சதுரங்களால்
என் வாழ்வில் எத்தனை எத்தனை
இழப்புகளின் தொடக்கங்களும்
இன்பங்களின் முடிவுகளும்!!

இப்போது நினைக்கிறேன்!
வாழ்க்கை வட்டமாகவே இருந்திருக்கலாம்,
என்னைப் போல‌
ஆதியும் அந்தமும் இல்லாமல்!!

No comments: