Monday, June 9, 2008

சிரிப்பு

பூ மலர்ந்தால்
பூவுக்கு அழகு
நீ சிரித்தால்
உன்
முகத்திற்கு அழகு!

ஆனால்
நீ ஏன்
சிரிப்பதில்லை!

சிரிப்பும்
சில நேரம்
சீரழித்து விடும்!

நரிகளிடம்
முறைப்பு
நல்லதோர்காப்பு!

ஆன்மாவில்
வெளிப்படும்
அந்த
அழகிய சிரிப்பு
அன்பின் சிகரம்
அதுவே
சொர்க்கதிதின்
வாசல்!

ஆனால்
வியாபார உலகில்
விதவிதமான
சிரிப்புக்கள்!
வேசம் போடும்
முகங்களைப்போல!

அவள் சிரித்தாலும்
அழகுதான்
அதுவே
ஆபத்தாகவும்
முடியும்!

எங்கே
எப்படி
எதற்காக
எந்தக்கோணத்தில்
என்றுஅளந்து
சிரிக்கமுடியவில்லை
என்னால்!

சிரிப்பு
அது
புனிதமானது!

No comments: