Thursday, May 29, 2008

தெரியுமா

திருப்பதியில் வெங்கடாசலபதி என்ற ஒரு சாமி இருக்கிறது; அதற்கு ஏழுமலையான் என்ற பெயரும் உண்டு. அதன் நெற்றியில் நெடு நாமம் சாத்தப்பட்டு இருக்கும். எத்தனைக் கோடி மக்களுக்கு இந்தக் கல் முதலாளி நாமம் சாத்தியிருந்தால் அந்தக் கோவிலுக்கு ரூ.7,500 கோடி சொத்து சேர்ந்திருக்கும். `இந்தியா டுடே’ இந்தக் கோயிலின் சொத்துக் கணக்கைத் தோராயமாகச் சொல்லியிருக்கிறது.

நிலம் ரூ.15,000 கோடி.
கட்டடங்கள் ரூ.1,500 கோடி.
நகைகள் ரூ.30,000 கோடி.
நிதி ரூ.20,000 கோடி.

கடல் மட்டத்திலிருந்து 3,200 அடி உயரத்தில் 10.33 சதுர மைல்கள் பரப்பளவில் இந்தக் கோயில் எழுப்பப்பட்டு இருக்கிறது.நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் உண்டியல் வசூலாம். இந்த மாதம் வரை இந்த ஆண்டில் மட்டும் கோயில் வருமானம் ரூ.900 கோடி. லட்டு வியாபாரம் மூலமும் லட்டாய் பணம் குவிகிறது. கொஞ்சம் தான் ரூ.28 கோடி.

No comments: